உலக தாய்ப்பால் வாரம் - கோவையில் மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் பேரணி!

ஆகஸ்டு முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, தாய்ப்பால் ஊட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



கோவை: உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பந்தய சாலையில் உள்ள டவரில் இருந்து மாசாணி மருத்துவமனை வரை செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.



இந்த பேரணியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,



ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்மார்கள் பாலூட்டும் முக்கியத்துவத்தை உணரக்கூடிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு தாய்ப்பால் மிகவும் உதவியாக இருக்கிறது. மாசாணி மருத்துவமனை மற்றும் இன்னர் வீல் கிளப் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

தாய்ப்பால் ஊட்டுவதின் முக்கியத்தை எடுத்து சொல்லக் கூடிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் தாய்ப்பால் தேவையுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கக்கூடிய தாய்மார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த பேரணி அமைக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கெட்டு விடக்கூடாது என்பதை பேணி காப்பதற்கு குளிர்சாதன வசதி மருத்துவமனை வழங்குகின்றனர். கோவை மாநகரில் பாலூட்டுவதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் காவல்துறையில் உள்ள தாய்மார்கள் பெண் காவலர்கள் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...