தாராபுரம் அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் - விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

தாராபுரம் அடுத்த கொங்கனாபுரம் பிரிவு அருகே இன்னோவா காரின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீதி பயங்கரமாக மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: தாராபுரத்தில் 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை சேர்ந்த கிருபாகரன் (24) சஞ்சய் (24) ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உறவினரான சந்திரன் (60) என்பவருடன் காரில் மதுரையில் இருந்து கோவை நோக்கி தாராபுரம் வழியாக நான்கு வழிச்சாலையில் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த இனோவா காரில் தாராபுரத்தில் சுகம் விதை பண்ணை நடத்தி வரும் ஆத்துக்கால்புதூரை சேர்ந்த விஜயகுமார் (35) மற்றும் சிவகுமார் (42) ஆகியோர் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் எதிர்நோக்கி வந்துள்ளனர்.



இந்த நிலையில், இன்னோவா காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் கார், சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் சென்று கொண்டிருந்த காரின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.



இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் இரு கார்களிலும் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.



அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...