பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் தீயிட்டு எரிப்பு - அதிர்ச்சி!

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்ட நிலையில், அலுவலகத்தின் பின்புறம் தீயிட்டு எரிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் குப்பையில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், 20 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய பல்லடம் தாலுக்கா வட்டாட்சியராக ஜெய்சிங் சிவக்குமார் என்பவர் உள்ளார். மேலும் பொதுமக்கள் அன்றாடம் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மனுதாரருக்குறிய தீர்வு காணப்படுவது வழக்கம்.



இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் மனுக்கள், உத்தரவுகள் சீல் வைக்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டவை அலுவலக பின்புறமாக குப்பையில் எரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இந்நிலையில் துணை ஆட்சியர் சுதன் ஜெய் நாராயணன் தலைமையில் ஆய்வு கூட்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருந்தது.



இதனையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை ஆட்சியரிடம் குப்பையில் கிடந்த மனுக்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பின்னர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இச்சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...