பல்லடத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கூலிப்படையினர் கொலைவெறி தாக்குதல் - பரபரப்பு!

பல்லடம் அருகே இளம்பெண் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இருவரையும் போலீசார் பிடித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 3 பெண்கள் உள்பட காதலனின் உறவினர்கள் 6 பேரை கூலிப்படையை வைத்து தாக்கிய சம்பவத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே காதலன் வீட்டாரை இளம்பெண்ணின் உறவினர்களை கூலிப்படையை வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை முதல் பெண் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி கடைசியாக பல்லடத்தை அடுத்த அம்மாபாளையத்தில் சூர்யபிரகாஷ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தேடியுள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து பல்லடம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பெண்ணையும் சூர்யபிரகாஷையும் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சம்பவம் நடந்த இடம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதால் பெண்ணை போலீஸ் பாதுகாப்புடன் நல்லூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காதலனும் அவரது உறவினர்களும் ஆம்னிவேனில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.



இதனிடையே ஆம்னி வேன் பல்லடத்தை அடுத்த அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது பைக் மற்றும் 3 கார்களில் வந்த மர்ம நபர்கள், வழிமறித்து ஆண், பெண்கள் என்று பாராமல் கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.



பின்னர் வெறி அடங்காமல் காதலனுக்கு பதிலாக அவரது மாமா சதீஷ்குமாரை வேனில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற பல்லடம் போலீசார் தாக்குதலில் பலத்த காயமடைந்த மனோஜ்குமார், அருணாதேவி, கிருஷ்ணவேணி, துளசிமணி, ஜோதிமணி, மாசிலாமணி ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தாக்குதலில்.ஈடுபட்ட கள்ளிமேட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலை பெண் வீட்டாரின் ஏற்பாட்டில் கூலிப்படைக்கு ஏற்பாடு செய்து காதலன் மீது தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.



தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பிரபல அரசியல் கட்சியின் நிர்வாகியான அன்பு ரமேஷ், செல்வகுமார் உள்ளிட்ட 15 திற்கும் மேற்பட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அன்பு ரமேஷ் மீது அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூலிப்படை கலாச்சாரம் வேறூன்ற விடாமல் தடுத்து நிறுத்தி இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...