தாராபுரம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய 9 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்!

தாராபுரம் அடுத்த பழனிரோடு அருகே அனுமதியின்றி 5 கோடி மதிப்பிலான செம்மண் ஏற்றிச் சென்ற 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் லாரிகளை கைப்பற்றிய வருவாய் துறையினர், அதனை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே செம்மண் கடத்திச் சென்ற கேரளாவை சேர்ந்த 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும், அதிக பாரத்துடன் செம்மண் லாரிகள் இயக்கப்படுவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார்.



இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த 9‌ கேரளா மாநில லாரிகளை பொதுமக்கள் தடுத்து சிறைபிடித்தனர்.



பின்னர் இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியருக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.



விதிமுறைக்கு புறம்பாக செம்மண் லோடு ஏற்றிவந்த 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாராபுரம் நகர வருவாய் ஆய்வாளர் சரவணன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...