முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி - அமைச்சர் சு.முத்துச்சாமி துவக்கி வைத்தார்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேரு விளையாட்டு அரங்கில் இருந்து காந்திபுரம் அண்ணா சிலை வரை கோவை மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.



கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் ஐந்தாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இதனை முன்னிட்டு கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து காந்திபுரம் அண்ணா சிலை வரை ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது.



மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணியை, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.



இதில் திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மாநகராட்சி மேயர் துணை மேயர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...