முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி - அமைச்சர் சு.முத்துச்சாமி துவக்கி வைத்தார்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேரு விளையாட்டு அரங்கில் இருந்து காந்திபுரம் அண்ணா சிலை வரை கோவை மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இதனை வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.



கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவையில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் ஐந்தாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.



இதனை முன்னிட்டு கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து காந்திபுரம் அண்ணா சிலை வரை ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பில் மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது.



மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணியை, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.



இதில் திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மாநகராட்சி மேயர் துணை மேயர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....