பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சேவை வழங்கினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த வசதிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.





முதலில், தெற்கு மண்டலம் வார்டு எண்.91க்குட்பட்ட சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.73க்குட்பட்ட பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையும், வார்டு எண்.72க்குட்பட்ட அருணாச்சலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.






நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த பின்னர், பொதுமக்களுக்கு நியாயவிலைப் பொருட்களை வழங்கி வைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர். கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த புதிய வசதிகள் அந்த வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.






இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத்தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திக் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், மஞ்சுளாதேவி, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...