பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சேவை வழங்கினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த வசதிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.





முதலில், தெற்கு மண்டலம் வார்டு எண்.91க்குட்பட்ட சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.73க்குட்பட்ட பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையும், வார்டு எண்.72க்குட்பட்ட அருணாச்சலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.






நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த பின்னர், பொதுமக்களுக்கு நியாயவிலைப் பொருட்களை வழங்கி வைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர். கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த புதிய வசதிகள் அந்த வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.






இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத்தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திக் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், மஞ்சுளாதேவி, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...