பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சேவை வழங்கினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த வசதிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.





முதலில், தெற்கு மண்டலம் வார்டு எண்.91க்குட்பட்ட சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.73க்குட்பட்ட பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையும், வார்டு எண்.72க்குட்பட்ட அருணாச்சலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.






நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த பின்னர், பொதுமக்களுக்கு நியாயவிலைப் பொருட்களை வழங்கி வைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர். கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த புதிய வசதிகள் அந்த வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.






இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத்தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திக் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், மஞ்சுளாதேவி, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...