துடியலூர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர் கைது!

துடியலூர் - வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சசிக்குமார் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஜீவானந்தம் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: துடியலூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார், இவர் தற்போது கோவை துடியலூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று உணவு சாப்பிடுவதற்காக துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சசிக்குமார் பணம் தர மறுக்கவே கெட்ட வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சசிக்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் கத்தியை காட்டி மிரட்டியதாக நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...