கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள், ரூ.12 லட்சம் பணம் கொள்ளை!

கோவை பீளமேடு புதூர் அருகே தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளரான ராஜேந்திரன், தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.


கோவை: கோவை பீளமேடு புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). இவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் பெங்களூரில் இருந்தவாறு செல்போனில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது சிசிடிவி வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே வசித்து வரும் நபர் ஒருவரை வீட்டில் சென்று பார்க்க சொன்னதாக தெரிகிறது. அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 36 சவரன் நகைகள், ரூ.12 லட்சம் பணமும் மாயமானது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி டிவிஆர்-யும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேந்திரன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....