திருமூர்த்திமலையில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை அமைக்கும் பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.



அதன்படி, தளி எத்தலப்பர் சிலை மற்றும் அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு கொண்டார்.

இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ராமராஜ், தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...