ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "விளையாட்டு விழா"

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "விளையாட்டு விழா" இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலால்வரித்துறையின் ஆய்வாளர் மற்றும் தமிழக தடகள விளையாட்டு அமைப்பின் பொருளாளர் சி.லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்; விளையாட்டு வீரராக வருவதற்கு வயது தடையில்லை. எந்த வயதிலும் விளையாட்டில் நுழைய முடியும். விளையாட்டு ஒழுக்கத்தினை, கட்டுப்பாட்டினை கற்றுக் கொடுக்கும். அதுமட்டுமின்றி பல்வேறு வாய்ப்புகளை நமக்கு அளிக்கும். இளைஞர்கள் விளையாட்டுத் திறனை வளர்க்க வேண்டும். உடல், மன ஆரோக்கியதிற்க்கு விளையாட்டு பெரிதும் உதவும். கல்வி நிறுவனங்கள் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எத்துறையிலும் சாதனை புரிய விளையாட்டு முக்கிய பங்கினை வகிக்கின்றன. அதேபோல பல்வேறு வேலை வாய்ப்பினையும் கொடுக்கின்றது எனக் கூறினார்.

இவ்விழாவில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவம் செயப்பட்டனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், இவ்வாண்டு விளையாட்டுக்கான மொத்த சாம்பியன் பட்டத்தினை பி.பி.ஏ(சி.ஏ) துறையும், இரண்டாம் இடத்தினை பி.எஸ்.சி(சி.எஸ்) துறையும் பெற்று சுழற்கோப்பையினை பெற்றனர். தடகள விளையாட்டில் பி.காம் துறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இதில், கோவை மாவட்ட தடகள விளையாட்டுப் பயிற்சியாளர் சீனிவாசன், கல்லூரி முதல்வர் பாபாஞானக்குமார், விளையாட்டுத் துறையின் இயக்குநர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...