தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்க கூடாது - பணியாளர்கள் ஊர்வலமாக சென்று மனு!

தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் பேருந்தில் சென்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊர்வலமாக சென்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாருக்கு கொடுக்க அரசாணை வெளியிட்டதாக கூறி தனியாருக்கு கொடுக்க கூடாது என வலியுறுத்தி கோவை மாவட்ட தூய்மை பணியாளர் சங்க கூட்டமைப்பினர் இன்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.



அண்ணா சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் செல்ல முற்பட்ட நிலையில், காவல் துறையினர் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் முன்பாக தடுத்து நிறுத்தினர்.



ஊர்வலமாக செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்த நிலையில், தூய்மை பணியாளர்கள் பேருந்துகள் மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.



ESI, PF பணத்தை எடுப்பதில் இருக்கும் சிக்கல்களை நீக்க வேண்டும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, காலை 7 மணிக்கு வேலை நேரம் போன்றவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இருக்கின்றனர். தூய்மை பணிகளை ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது. தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுக்க கூடாது.



ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர தூய்மை பணியாளர்களாக்க வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

மேலும், செப்டம்பர் 15 ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து தூய்மை பணியாளர் சங்கங்களையும் சந்தித்து அவர்களையும் ஒருங்கிணைத்து தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கு எதிராக இயக்கம் நடத்த போவதாகவும் தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....