திருப்பூரில் கனமழை - பல்லடம் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பரவலாக கன மழை பெய்த நிலையில், கனமழை காரணமாக, திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர்: கனமழை காரணமாக பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை, நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடை பகுதியில், இன்று பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.



மேலும் மழைநீர் வடிந்து செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய்த்தொற்று ஏற்படவும் வாயப்புள்ளதாக கூறிய அப்பகுதிமக்கள் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள மழைநீர் வடிகால் அமைத்து தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...