ஆயுதப்படை காவலரின் முயற்சியால் கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பாபு என்பவரின் முயற்சியின் காரணமாக சக காவலர்கள் உதவியுடன், உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூலம் கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு பணிகள் இன்று துவங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பாபு, அரசு கலைக் கல்லூரியுடன் இணைந்து கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆயுதப்படை பணியாற்றும் முதல் நிலை காவலர் பாபு தன்னுடன் பணியாற்றும் காவலர்கள், உதவும் கரங்கள் குழு மூலமாக அரசு கலைக் கல்லூரியில் பயிலும் அரசியல் துறை மாணவர்களுடன் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



கோவை அரசு கலைக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின் காவலர் பாபு கூறியதாவது,

கோவையில் ஒரு கோடி மரங்களை நடவுள்ளோம். முதற்கட்டமாக கோவை அரசு கலைக் கல்லூரியில் 300 மரங்கள் நடப்பட்டுள்ளது. குக் கிராமம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் அதிகம் கொடுக்கும் மரங்கள் மற்றும் நிழல் தரவுள்ள மரங்களை நடவு செய்ய உள்ளோம்.

இந்த நிகழ்வில் காவலர் குழு மற்றும் லைன்ஸ் கிளப் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். முக்கியமாக மூங்கில், இயல்வாகை, புங்கமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...