அலங்கியம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு!

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில், மாணவ மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் அலங்கியம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில், வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் தாராபுரம் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உளவியல் ஆலோசகர் கௌதம் நடராஜன், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புகை மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறித்து தெளிவாக விளக்கி கூறினார்.



மேலும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் பயன்படுத்துபவரின் உடல் நலம் மட்டும் கெடாமல் தன்னை சுற்றி இருப்பவர்களின் உடல் நலம் பாதிப்படையும். எனவே புகையிலை மற்றும் போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவ மாணவியர்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.



வட்ட சட்டை பணிக்குழு தலைவரும் தாராபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான தர்ம பிரபு கூறுகையில்:- சட்டம் என்றால் என்ன என்பதையும், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் மாணவ மாணவியர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் மிகவும் தெளிவாக எடுத்து கூறினர்.



அலங்கியம் காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் கூறுகையில் இன்றைய இளைய சமுதாயம் அழிந்து வருவதற்கு காரணம் போதை பொருட்கள் மட்டுமே எனவே புகையிலை மற்றும் போதைப் பொருள் இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்க மாணவ மாணவியர்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வட்ட சட்டை பணிக்குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான தர்ம பிரபு, உளவியல் ஆலோசகர் கௌதம் நடராஜன்,அலங்கியம் காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன், அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொண்ணு சாமி, ஆசிரியர்கள் அழகர்சாமி, முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து நிகழ்ச்சியில் கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....