நடிகர் சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

நடிகர் சத்யராஜின் தாய் நாதாம்பாள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: நடிகர் சத்யராஜ் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை உடல் ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ள சூழலில் இன்று காலை அவரது உடலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



அதைத்தொடர்ந்து நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா மற்றும் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா திமுக தலைமை சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் சத்யராஜ் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...