ரூபெல்லா தடுப்பூசியால் பள்ளி மாணவருக்கு மூளை காய்ச்சல் ? கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவையில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி போட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் மூளை காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகன் கோகுல் அப்பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.  கடந்த மாதம் அப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் தட்டம்மை தடுப்பு மருந்தான ரூபெல்லா தடுப்பூசி மாணவர்களுக்கு போடப்பட்ட நிலையில் மாணவன் கோகுலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகும் குணமாகாமல் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கோகுல்-ன் பெற்றோர் கோவை அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவனுக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மாணவனின் உடல்நிலை அவ்வப்போது குணமாவதும் திடீரென அவன் மனநிலை பாதிக்கப்பட்டது போல் காணப்படுவதும் அவரது பெற்றோரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  ரூபெல்லா தடுப்பு மருந்து 15 வயதுக்குட்பட்டோருக்கு கட்டாயம் என்ற அடிப்படையில் அரசு வழங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் இதேபோன்று குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவது தொடர்கதையாகி வருவது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...