கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 20 காவல் நிலையங்கள் ISO தரச்சான்று பெற்ற நிலையங்களாக உயர்ந்துள்ளன.


கோவை: கோவை மாவட்ட காவல்துறையின் மக்கள் நட்பு மற்றும் தரமான காவல் சேவைகளுக்கான முக்கிய அங்கீகாரமாக, மாவட்டத்தில் உள்ள மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 காவல் நிலையங்கள் தற்போது ISO தரச்சான்று பெற்ற காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளன.


கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தரமான, விரைவான மற்றும் மக்கள் நட்பு காவல் சேவைகளை வழங்க பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்களின் நிர்வாகம், சேவைத் தரம், புகார் பராமரிப்பு, ஆவண மேலாண்மை, சுத்தம் மற்றும் பொதுமக்கள் அணுகுமுறை போன்ற அம்சங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக, மே 21, 2026 அன்று கோவை மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஆனைமலை, வால்பாறை, பேரூர், KG சாவடி, மதுக்கரை, காருண்யா நகர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோமங்கலம், சிறுமுகை, நெகமம், கருமத்தம்பட்டி மற்றும் வடக்கிப்பாளையம் காவல் நிலையங்கள் ISO சான்றிதழ் பெற்றுள்ளன.


இதற்கு முன்பாகவே சூலூர், பொள்ளாச்சி தாலுகா, பொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்கள் ISO சான்றிதழ் பெற்றிருந்தன. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 காவல் நிலையங்கள் தற்போது ISO தரச்சான்று பெற்ற காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளன.

இந்த சாதனையை ஏற்படுத்திய காவல் நிலைய ஆய்வாளர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு கோவை மாவட்ட காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.


மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட காவல்துறையினர் இனியும் பொதுமக்களுக்கு உயர்தர காவல் சேவைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...