எதிர்கால விதை தேவைக்கான உத்திகள் கடைக்கோடி விவசாயி வரை சென்றடைய வேண்டும்- முனைவர் மு.பாஸ்கரன்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையத்தில் மூன்றாவது வருடாந்திர கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக நிர்வாகிகள், விதை சான்றளிப்புத் துறை இயக்குனர்கள், 50-க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், தனியார் விதை நிறுவன அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு விதை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கி.காளிதாஸ், விதை சான்றளிப்புத் துறை இணை வேளாண் இயக்குனர் ஆர்.பாண்டியராஜ் மற்றும் வேளாண் பல்கலைக்கழக பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர். கே.கணேசமூர்த்தி ஆகியோர் தரமான விதை உற்பத்தி, அதில் உள்ள முறன்பாடுகள் பற்றிய முக்கியத்துவத்தை விளக்கினர். 



வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் முனைவர். எம்.மகேஷ்வரன், விதை தூய்மை, உயிர் தொழில்நுட்ப முறையில் விதையின் உண்மை தன்மை கண்டறிதல் மற்றும் வீரியமான விதை உற்பத்தி முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பரிந்துரைத்தார்.



தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். மு.பாஸ்கரன், தனது விழா உரையில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப விதைகளின் தன்மையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தி வேளாண் உற்பத்திக்கு வகை செய்யும் முறைகளை முன் வைத்தார்.

எதிர்கால விதை தேவைக்கு ஏற்ற உத்திகளையும், பல்கலைகழகங்கள், விதை உற்பத்தியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பினையும் பல்கலைக் கழக ஆராய்ச்சியினை கடைமட்ட பயனாளிகளான விவசாயிகள் வரை எடுத்து செல்வது பற்றியும், இதில் உள்ள குறைபாடுகளை தவிர்ப்பது பற்றியும் சிறப்பாக விவரித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கு.இராமசாமி தனது சிறப்புரையில் எண்ணெய்வித்து பயிர்களின் உற்பத்தி பற்றியும் சிறப்பான முறையில் இடைநில்லா விதை வழங்குவது பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சிகளையும் உற்பத்தி முறைகளையும் நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் நிலவும் தன்மையை உணர்ந்து இந்தியாவில் சிறப்பான விதை உற்பத்தி திட்டம் வகுக்கப்படுவதையும் எடுத்துரைத்தார்.

விவசாய பெருமக்களுக்காகவே நாம், அவர்களின் வாழ்வாதரம் உயரும்போதே நாடும் வளம்பெறும் என எடுத்துரைத்தார். விவசாய ஆராய்ச்சியால் காணப்படும் குறைபாடுகளை நீக்கி அவற்றினை நிவர்த்தி செய்து முன்னேற்றப்பாதையில் வேளாண் உற்பத்தியினை கொண்டு செல்வது பற்றியும் எடுத்துரைத்தார்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக கருத்தரங்க கையேட்டினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கு.இராமசாமி வெளியிட தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். மு.பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.



முன்னதாக வேளாண் பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) முனைவர் பொ.செல்வராஜு வரவேற்புரையாற்றினார். இறுதியில் வேளாண் பல்கலைக்கழக விதை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறை தலைவர் முனைவர். ஆர். உமாராணி நன்றியுரையாற்றினார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...