சுங்கம் பணிமனை கிளை மேலாலரைக் கண்டித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிமனை முன்பு போராட்டம்


கோவை சுங்கம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளரை கண்டித்தும், செம்மேடு பகுதியில் இயக்கப்பட்ட பேருந்தின்  ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தக்கியவர்களை கைது செய்யக் கோரியும், பேருந்துகளை இயக்க மறுத்து பணிமனை முன்பாக  50 க்கு மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நேற்று முந்தினம், கோவை வெள்ளிங்கிரி அடிவாரத்தில் இருந்து  காந்திபுரம்  நோக்கி வந்து  அரசு பேருந்தை,  செம்மேடு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் மறித்து உள்ளனர். குடி போதையில் இருந்த காரணத்தால், பேருந்தை முன்னேரி செல்ல வழிவிடாமல் தகராரில் ஈடுபட்டதுடன், ஓட்டுநர் ராஜு மற்றும் நடத்துனர் செந்திலை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக ஆலந்துறை காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த ராஜு, விசாரணைக்காக காவல்நிலையம் செல்ல வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் , கிளை மேலாளர் அனுமதி அளிக்க மறுத்து பேருந்தை இயக்க வற்புறுத்தி உள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்தத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்  50 க்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை மேலாளரின் அலட்சிய போக்கை கண்டித்தும், செம்மேடு  அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போராட்டம் காரணமாக சுங்கம் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததை அடுத்து அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக போராட்டம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...