பட்டா நிலங்களில் வன விலங்குகளின் தாக்குதலைதடுக்க தவறிய வனத்துறையைகண்டித்து, மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

கோவை அருகே பட்டா நிலங்களில் வன விலங்குகளின் தாக்குதலைதடுக்க தவறிய வனத்துறையைகண்டித்து, மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி அடிவார பகுதிகளில் வன விலங்குகள் மற்றும் மனிதமோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கடும் வறட்சிகாரணமாக காட்டு யானைகள் பட்டா நிலங்களுக்குள் புகுவது கடந்த சில நாட்களாகஅதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் விவசாயிகள் படுகாயமடையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே கோவை வரப்பாளையம், தடாகம் உள்ளிட்டபகுதிகளில் கடந்த சில நாட்களாக 6 வயதுடைய குட்டி பெண் யானைஒன்று வாயில் காயங்களுடன் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குள் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களுக்காக வீட்டிற்குள்நுழைவதும், அங்குள்ள முதியவர்களை தாக்குவதும் தொடர்கதையாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

அந்த யானையைபிடித்து வேறு பகுதிக்கு அப்புறப்படுத்த வேண்டும் அல்லதுஅதனை முகாமில் கொண்டுசேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். நேற்று மாங்கரைவனப்பகுதியில் 4 வயது ஆண் குட்டி யானை பிடிக்கப்பட்டு சாடிவயல் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்,வனத்துறையினர் சேட்டை செய்யும் யானையை பிடிக்க உரியநடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து யானையை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தகவலை தரும் வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை எனவும் அவர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது, காட்டு யானையை பிடிக்க தலைமை வனப்பாதுகாவலர் அளித்துள்ள அனுமதி கடிதத்தை வனத்துறையினர் அளித்ததால் விவசாயிகள் முற்றுகையைகைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை காரணமாகஅப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...