கோவை முதல் கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை ஜுலை முதல் துவக்கம்

கோவை முதல் கொழும்புவிற்கு நேரடியாக செல்ல ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது புதிய சேவையினை துவங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விளக்கக் கூட்டம் மார்ச் 15ம் தேதியன்று நடைபெற்றது. 

இதில், சுங்கத்துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகள் உட்பட விமான சேவையின் அனைத்து மூத்த அதிகாரிகள் கூட்டத்தை விமான இயக்குநர் ஸ்ரீ ஜி.பிரகாஷ் ரெட்டி கூட்டினார். இந்திய விவகாரத்துறை மேலாளர் ஹரிதிப் சிங் பால், ஸ்ரீலங்கன் விமான சேவை சார்பில் பங்கேற்று தற்போது புதிதாக துவங்கவுள்ள கோவை முதல் கொழும்பு வரையிலான விமான சேவை குறித்து விவரித்தார்.

இந்த சேவை வரும் ஜுலை 15ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில், 1435/1535LT என்னும் கோவை- கொழும்புவிற்கான விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் செயல்படுத்தப்படவுள்ளது. 

மேலும், இந்த விமான சேவையை குளிர்காலத்தில் வாரம் முழுவதும் செயல்படுத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக கோவை- கொழும்புவிற்கு நேரடி விமான சேவையாக துபாயை மையமாகக் கொண்ட ஏர் அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த சில்க் ஏர் ஆகிய விமானங்கள் சேவை அளித்து வந்தன. தற்போது புதிதாக அந்த சேவையில் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...