வால்பாறை எஸ்டேட் பகுதியில் இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை பலி

வால்பாறையை அடுத்துள்ள சக்தி எஸ்டேட் அறுகாமையில் உள்ள மகாலட்சுமி எனும் எஸ்டேட் பகுதியில் ஏலக்காய் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் ஊடுறுவி பயிர்களை சேதம் செய்துவிடுவதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், மகாலட்சுமி எஸ்டேட் ஏலக்காய் தோட்டத்தில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது எஸ்டேட் பணியாளர்கள் அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு ஒரு யானை இறந்துகிடப்பது தெரியவந்தது.



இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் சக்திவேல் மற்றும் சந்திரன், கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானையின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தி, பின் யானையில் உடலை சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டுச்சென்றனர்.



முன்னதாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறந்து 10 நாட்களுக்கும் மேலாகியிருக்கும். தற்போது வன விலங்குகளுக்கு உணவாக இதனை இங்கேயே விட்டுச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...