அனுமதியை பெறாமல் தோண்டப்பட்டுள்ள குழிகள் - நிலத்திற்கு சொந்தமான மூதாட்டி துடியலூர் காவல்நிலையத்தில் புகார்

பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் எந்த இழப்பீடும் வழங்காமலும், முன் அறிவிப்பு இல்லாமலும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக தனது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதாக சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சியில், சி ஆர் பி எப் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திடிரென குழிகள் தோண்டப்பட்டுள்ளது.



இந்த நிலத்தில் ஆர்ஜிதம் செய்வதற்கு சாவித்திரி அம்மாளுக்கு இதுவரை முதற்கட்ட நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை என்றும் மேலும் இவருக்கு இழப்பீடு தொகையோ, அல்லது இழப்பீடு கொடுத்து விடுவோம் என்ற எந்த அத்தாட்சியும் இல்லாமல் இவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நிலத்தில் இருந்த கம்பி வேலிகளை உடைத்து ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் குழிகள் தோண்டியுள்ளனர்.

இதற்கு செயற்பொறியாளர் செந்தில் குமார் என்பவர் தான் காரணம் என்றும் அவர் மீதும் பில்லூர் ஒப்பந்ததாரர்கள் மெகா இன்ஜினியரிங் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தின் மீதும் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில் எங்களுக்கு உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு அவர்கள் பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இது குறித்து செயற்பொறியாளர் செந்தில்குமாரிடம் பேசும்போது டிசம்பர் மாதத்திற்குள் முதலமைச்சர் மூலம் அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப் பட உள்ளதால் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளின் உத்தரவின்படி அவர்களது நிலத்தில் குழி தோண்டியதாக தெரிவித்தார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...