கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்தார். பீளமேடு பகுதியில் தூய்மை பணிகளை முழுமையாக செய்ய அறிவுறுத்தினார்.
Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு எண் 27-ல் உள்ள பீளமேடு பகுதிகளில் இன்று (ஜூன் 26, 2026) தூய்மை பணிகள் மற்றும் சாக்கடை, வாய்க்கால் சுத்திகரிப்பு பணிகள் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

காலை நேரத்தில் லால்பகதூர் காலனியில் வாய்க்கால் அடைப்பை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வார்டு ஆய்வாளர் பாஸ்கரிடம் வாய்க்காலை முழுமையாக சுத்தம் செய்து, நீரோட்டம் சீராக இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து சிருங்கார் நகர் பகுதியில் கவுன்சிலர் ஆய்வு மேற்கொண்டபோது, சாலையோரங்களில் மரக்கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் தேங்கியிருப்பதை கண்டார். இதையடுத்து நாளை காலை மாஸ் கிளீனிங் மேற்கொண்டு பகுதியை முழுமையாக சுத்தம் செய்யுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் லால்பகதூர் காலனி, கோபால் நகர் மற்றும் சிருங்கார் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கவுன்சிலர், பொதுமக்களிடம் தினசரி வீடு தோறும் குப்பை சேகரிக்கும் ஆட்டோ முறையாக வருகிறதா என கேட்டறிந்தார். மேலும், சாலையோரங்களில் தேங்கும் குப்பைகளை தினமும் அகற்றி பகுதியை தூய்மையாக பராமரிக்குமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
கமலாஜின் வீதி பகுதியிலும் கவுன்சிலர் ஆய்வு செய்தார். அங்கு தினசரி வீடு தோறும் குப்பை சேகரிக்கும் பேட்டரி ஆட்டோ முறையாக வருகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதை கண்ட அவர், உடனடியாக சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.

முத்து வீதி-முத்து சந்து பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது பொதுமக்களிடம் பணிகள் நிறைவு பெற்றதற்கான நோட்டில் கையொப்பம் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெறுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.
இந்த தூய்மை பணிகள் அனைத்திலும் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி, வார்டு ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
காலை நேரத்தில் லால்பகதூர் காலனியில் வாய்க்கால் அடைப்பை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வார்டு ஆய்வாளர் பாஸ்கரிடம் வாய்க்காலை முழுமையாக சுத்தம் செய்து, நீரோட்டம் சீராக இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி மற்றும் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து சிருங்கார் நகர் பகுதியில் கவுன்சிலர் ஆய்வு மேற்கொண்டபோது, சாலையோரங்களில் மரக்கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகளவில் தேங்கியிருப்பதை கண்டார். இதையடுத்து நாளை காலை மாஸ் கிளீனிங் மேற்கொண்டு பகுதியை முழுமையாக சுத்தம் செய்யுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் லால்பகதூர் காலனி, கோபால் நகர் மற்றும் சிருங்கார் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கவுன்சிலர், பொதுமக்களிடம் தினசரி வீடு தோறும் குப்பை சேகரிக்கும் ஆட்டோ முறையாக வருகிறதா என கேட்டறிந்தார். மேலும், சாலையோரங்களில் தேங்கும் குப்பைகளை தினமும் அகற்றி பகுதியை தூய்மையாக பராமரிக்குமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
கமலாஜின் வீதி பகுதியிலும் கவுன்சிலர் ஆய்வு செய்தார். அங்கு தினசரி வீடு தோறும் குப்பை சேகரிக்கும் பேட்டரி ஆட்டோ முறையாக வருகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் இருப்பதை கண்ட அவர், உடனடியாக சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.
முத்து வீதி-முத்து சந்து பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது பொதுமக்களிடம் பணிகள் நிறைவு பெற்றதற்கான நோட்டில் கையொப்பம் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெறுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.
இந்த தூய்மை பணிகள் அனைத்திலும் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி, வார்டு ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.