குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் - விவசாயிகள் பங்கேற்பு

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி உள்ளிட்ட 1035 கால்நடைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.


திருப்பூர்: குண்டடத்தை அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு குண்டடம் வட்டார வேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி உள்ளிட்ட 1035 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் குண்டடம் வட்டார கால்நடை உதவி மருத்துவர் வனிதா மற்றும் சின்ன மோலார்பட்டி உதவி மருத்துவர் பிரகாசம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் சிறந்த கால்நடை மேலாண்மை குழுக்கான மூன்று வளர்ப்பு கிடாரிகளுக்காக விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...