வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை - பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதால் அச்சம்

பச்சை மலை எஸ்டேட் அருகே யானைகள் நடமாட்டம் உள்ள நகராட்சி பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே சில தினங்களாக 22 காட்டு யானைகள் கருமலை எஸ்டேட் பச்சமலை எஸ்டேட் பாரலை எஸ்டேட் போன்ற எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்தது.



பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்த 15 காட்டு யானைகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளிருந்த டேபிள் சேர் டிவி ஸ்மார்ட் போர்டு பள்ளி குழந்தைகளின் வருகை ஆவணங்கள் போன்ற அனைத்து பொருட்களை சேதப்படுத்தியது, பள்ளி வளாகம் வன பகுதி அருகில் உள்ளதால் யானையை வந்தது யாருக்கும் தெரியாத நிலையில் யானைகளை விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...