உடுமலையில் அதிகாலை முதல் கனமழை - உழவர் சந்தையில் தேங்கிய மழைநீர்

உடுமலையில் உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் அமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் உழவர் சந்தை பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருது நிலையில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்த காரணத்தால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.



இந்த நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை முன்பு அதிக அளவு மழை நீர் தேங்கியால் காலை வழக்கம் போல் உழவர் சந்தை பகுதிக்கு வந்த விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.



எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உழவர் சந்தை முன்பு மழை நீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...