எம்.எஸ்.எஸ் நிறுவனம் சேவை குறைபாடு - இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு 2022ம் ஆண்டு, பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் அனுப்பிய டயரி மெஷினை டெலிவரி செய்யாமல் எம்.எஸ்.எஸ் நிறுவனம் திருப்பி அனுப்பியது கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.


கோவை: பார்சல் சர்வீஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, ஆவாரம்பாளையம் ரோட்டில், ராஜசேகர் என்பவர் பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சேலம் ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு, 2022, செப். 1ல், 10,030 ரூபாய் மதிப்புள்ள, டயரி மெஷின் ஒன்றை, எம்.எஸ்.எஸ். என்ற பார்சல் சர்வீஸ் வாயிலாக, அனுப்பி வைத்தார். ஆனால், வாடிக்கையாளருக்கு டயரி மெஷின் டெலிவரி செய்யப்படாமல் திரும்பி வந்தது.

இது பற்றி கேட்ட போது, 'முகவரியில் ஆள் இல்லை' என்று கூறினர். ஆனால், குறிப்பிட்ட முகவரிக்கு, பார்சலை கொண்டு செல்லாமல், வேறு முகவரிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜசேகர் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'மனுதாரர் அனுப்பிய முகவரிக்கு, பார்சலை எடுத்து செல்லாமல், எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாருக்கு மொத்தம் 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...