கோடாங்கிபாளையத்தில் கல்குவாரியில் டெட்டனேட்டர் வைத்து வேட்டு - வீடுகளில் விரிசல்

சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிக்கு வைத்த வேட்டால், நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதில் குவாரிக்குள் இருக்கும் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடாங்கி பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் விஜயலட்சுமி என்ற கல்குவாரியில் நேற்று மாலை வேட்டு வைத்ததாகவும் அதற்கு சட்டவிரோதமாக டெட்டநேட்டர்களை பயன்படுத்தியதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



மேலும் இந்த கல்குவாரி ஒரு மாத காலம் ரீஸ் காலம் முடிந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் இந்நிலையில் ஒரு ரூம் முழுக்க வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் அது வெடித்ததில் கல்குவாரிக்குள் இருக்கும் வீடுகள் இடிந்து தரைமட்டமாக உள்ளதாகவும் அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள் விரிசல் விட்டும் வீட்டின் கண்ணாடிகள் இடிந்து விழுந்தும் மாபெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் குடியிருக்க முடியவில்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து தற்போது சம்பவம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து சிலிண்டர் வெடித்து விட்டதாக பொய்யான தகவலை கூறுவதாகவும் இதற்கு பல்வேறு அலுவலர்களும் துணை போவதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் கால அவகாசம் முடிந்த நிலையிலும் பயன்படுத்தி வந்தது எப்படி இதுபோன்று மாபெரும் வெடி விபத்து ஏற்பட்டும் இன்னும் இதுவரை இந்த கம்பெனியை சீல் வைக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்று பல்வேறு கேள்விகளை இப்பகுதி விவசாயிகள் எழுப்புகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...