தாராபுரம் ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தராரபுரம் ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிசேகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சோளக்கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலய ஜீர்னோத்தாரன அஷ்பந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தாராபுரம் சோழக்கடை வீதியில், ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.



தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து, முதல்கால யாக பூஜை நடந்தது. 14-ம் தேதி காலை, இரண்டாம் காலயாக பூஜையும், அன்று மாலை, மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. 15-ல் நான்காம் கால யாக பூஜையும், மாலை, ஐந்தாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.



காலை, ஆறாம் கால யாக பூஜையும், 8:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு ஐயப்பன், மூலஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் தாராபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது. என்பது தாராபுரம் ஐயப்பன் கோயிலின் சிறப்பு என பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு ஸ்ரீ ஐயப்பன் கோவில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஜெமினி பெருவழி பயணக்குழு, தலைவருமான சி.சண்முகவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...