மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் கயல்விழி அஞ்சலி

ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உடல்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மனக்கடவு ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை பெட்ரோல் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தமிழ்மணி, சித்ரா, கலாராணி, செல்வராணி, பாலகிருஷ்ணன், ஆகிய ஐந்து பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.



அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது.



இறந்தவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உயிர் இழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...