திருப்பூர் கணபதிபாளையத்தில் தமிழ்நாடு யோகாசன போட்டி - 400-க்கும் மேற்பட்ட யோகாசன மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கணபதிபாளையம் வி.ஏ.டி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட யோகா விளையாட்டு கழகம் சார்பில் 79_வது தமிழ்நாடு யோகாசன சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.


திருப்பூர்: திருப்பூர் கணபதிபாளையத்தில் தமிழ்நாடு யோகாசன சாட்சி போட்டியில் 400-க்கும் மேற்பட்ட யோகாசன மாணவ மாணவிகள் பங்கேற்று தனுராசனம், சாசங்காசனம், சர்வாங்க ஆசனம், சக்கராசனம், வீர வதராசனம் உள்ளிட்ட ஏராளமான ஆசனங்களை செய்து காண்பித்து தங்களது யோகாசன திறமைகளை வெளிகாட்டினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.



திருப்பூர் அருகே கணபதிபாளையம் வி. ஏ.டி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட யோகா விளையாட்டு கழகம் சார்பில் 79_வது தமிழ்நாடு யோகாசன சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.



இந்த யோகாசன போட்டியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வரை படிக்கும் மாணவ மாணவிகள், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள், அனைத்து வயதினர்கள் உள்ளடக்கிய பொது பிரிவு என மூன்று பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடைபெற்றன, இந்த யோகாசன போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தனுராசனம், சாசங்காசனம், சர்வாங்க ஆசனம், சக்கராசனம், வீர வதராசனம் உள்ளிட்ட ஏராளமான ஆசனங்களை செய்து காண்பித்து தங்களது யோகாசன திறமைகளை வெளிகாட்டினர்.

இதில் குழந்தைகளின் பெற்றோர்கள் புதிதாக யோகாசனத்தை கற்க விரும்பும் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.



இந்த யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்த யோகாசன போட்டியானது முழுக்க முழுக்க குழந்தைகளின் திறனை மேம்படுத்த திறனாய்வு போட்டியாக நடைபெற்றன.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...