உடுமலை அருகே பூளவாடி கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசு விருது - அமைச்சர் பாராட்டு

மாநில அளவில் சிறப்பாக நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்கு நூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்கு  விருதை அறிவித்தது.


திருப்பூர் ;திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசு விருது மற்றும் கேடயம் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பூளவாடி கிளை நூலகம் இளம் வயது மாணவர்களிடம் வாசிப்பை நேசிக்க வைத்து பல்வேறு செயல்பாடுகளோடு பல்வேறு விழிப்புணர்வை சிறார்களிடம் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் மாநில அளவில் சிறப்பாக நூலக வளர்ச்சியில் பங்களிப்பை ஆற்றிய பதினான்குநூலகங்கள் வரிசையில் தமிழக அரசு பூளவாடி முழு நேர கிளை நூலகத்திற்குவிருதை அறிவித்தது.

மயிலாடுதுறை மாவட்டம் நூலக தந்தை பிறந்த ஊரான சீர்காழி யில் நடந்த விருது வழங்கும் விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்கள் விருதையும் கேடயத்தையும் வாசகர் வட்டத்திற்கு வழங்கினார்.

நூலக ஆர்வலர் விருது மற்றும் கேடயத்தை வாசகர் வட்ட தலைவர் க. சுப்பிரமணியன். மற்றும் வாசகர் வட்ட செயலாளர் நூலகர் ஆர். இலட்சுமணசாமி ஆகியோர் பெற்று கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...