உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பயிற்சி - பெண் தொழில் முனைவோர் பங்கேற்பு

வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழிற் முனைவோருக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சியில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியை போடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மகளிர் திட்டம் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மகளிர் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தாராபுரம் இயக்குனர் குணசீலி வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிற்சியானது 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் நிகழ்வாக தொழில் முனைவோரின் திறன்கள், சந்தை ஆராய்ச்சி, ஒரு நிறுவனத்தின் சாத்தியம் உள்ளிட்ட பயிற்சி நடைபெற்றது. 2-வது நிகழ்வாக 23-ம் தேதி வியாழக்கிழமை வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி நடைபெற உள்ளது.

3-வது நிகழ்வாக 25-ம் தேதி சனிக்கிழமை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டம், பணி மூலதன மேலாண்மை, பணப்புழக்கம், வணிக கணக்குகளை வைத்திருத்தல் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் ஐஸ்வர்யா நன்றி உரை கூறினார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...