பொள்ளாச்சி அருகே பரமக்குடியிலிருந்து ஆன்மிக சுற்றுலா வந்த பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வளைவில் திரும்ப முயன்றபோது பஸ் மோதியதில், டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் பகுதியில் வளைவில் திரும்ப முயன்ற டிராக்டர் மீது 54 பயணிகளுடன் பரமக்குடியில் இருந்து மேல்மருவத்தூர் சென்றுவிட்டு கோவை வழியாக பொள்ளாச்சி மாசாணியம்மன்கோவில் மற்றும் பழனிக்கு வந்த சுற்றுலாப் பேருந்தானது கோயமுத்தூர் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிராக்டரில் பயணித்த டிரைவர் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் .

பேருந்தில் பயணித்த 8 பேருக்கு சிறு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டது. விபத்து காரணமாக பொள்ளாச்சி கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குபதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...