ஏஐசி ரைஸ் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது

ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் பங்கேற்ற கருத்தாய்வில் "தமிழ்நாட்டில் காலநிலை தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பட்டியலிடுதல்" என்ற தலைப்பில் இந்தத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய அவரது கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்தது.


கோவை: தொழில் முனைவோர்கள் மற்றும் புத்தாக்கக் கருத்துகளை வளர்ப்பதிற்கான சான்றாக, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு வழங்கிய காலநிலைசார் தொழில் நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 28.12. 2023) நடைபெற்ற கூட்டம் முக்கிய பங்கு வகித்தது.

ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் பங்கேற்ற கருத்தாய்வில் "தமிழ்நாட்டில் காலநிலை தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பட்டியலிடுதல்" என்ற தலைப்பில் இந்தத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய அவரது கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் ஏஐசி ரைஸ் இந்த துறையின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர்கள்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார்.

சின்க்ரோன் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீராம் சங்கரன், பயோஃப்பிள்-இன் தலைமை நிர்வாக அதிகாரி கிஷன் கருணாகரன் மற்றும் சர்க்கிள்எக்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் விஷ்ணுவரதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஓர் பகுதியாக ஏஐசி ரைஸ் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு-ன் மிஷன் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதனுடன் ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் பங்குப் பெற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...