அமராவதி முதலைப் பண்ணை அருகே வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கடை திறப்பு

முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அமராவதி அணையின் முதலைப் பண்ணை பகுதியில் சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் கோட்டம், அமராவதி வனச்சரகம் சார்பில் அமராவதி அணை பகுதி அருகே கடந்த 1975 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதலைப்பண்ணை துவக்கப்பட்டது.



இங்கு குட்டிகள் முதல் பெரியது வரை 84 சதுப்பு நில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி வனச்சரகத்தில் கரட்டுப்பதி, பாறையூர், தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமராவதி முதலை பண்ணை அருகே கரட்டுப்பதியில் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக சுற்றுச்சூழல் மேம்பாட்டுகுழு அமைக்கப்பட்டு, வனத்துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது.

இங்கு முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



சூழல் கடை திறப்பில் ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் ராமசுப்பிரமணியம், இணை இயக்குனர் தேவேந்திர குமார் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இதில் அமராவதி வனச்சரகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம் முதலைப் பண்ணையில் பராமரித்து வரும் முதலைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கப்படும் உணவு குறித்தும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் வனத்துறையினரிடம் ஆலோசனை செய்தார்.

மேலும் புதிதாக துவங்கப்பட்டுள்ள சூழல் கடையில் உணவுகளை தரமாகவும், சுகாதாரமாகவும் சுற்றுலா பயணிகள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்க அறிவுறுத்தினார். தேர்வு விடுமுறை என்பதால் முதலை பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....