குண்டடத்தில் உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பொங்கலூர் உழவர் 36 நிறுவனத்தின் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சிவகாமி புவனேஸ்வரமூர்த்தி தலைமையில் குண்டடம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசன் மூர்த்தி, குத்து விளக்கு ஏற்றி உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு பல எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.



இலவச மின்சாரம், மானிய விலையில் விவசாய உபகரணங்கள் வழங்குதல், இப்படி பல எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...