மூலனூரில் அரசுப்பள்ளி மற்றும் கோவில் புனரமைக்கப்பட்டு அரசிடம் ஒப்படைப்பு

அரசு பள்ளியையும், கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு அமைச்சர் கயல்விழி நன்றி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மூலனூர் உள்ள ஓலபாளையம் அரசு பள்ளி மற்றும் குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்க பட்டு அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஓலபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அருள்மிகு குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்கும் பணி ஆறுமுகம் அறக்கட்டளை சார்பில் அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் நிறுவனம் 35, லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அரசு பள்ளி மற்றும் கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில், நடைபெற்றது.

இந்நிகழ்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மற்றும் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில், மக்கள் நலத்திட்ட பணிகள் அனைத்தையும் அரசு மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அனிதா டெக்ஸ்டைல் நிறுவனங்களைப் போன்று தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து இதுபோன்ற மக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.



இதுபோன்ற மக்கள் நலத்தட்ட பணிகளை அரசுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்களும் முன் வருவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.

அரசு பள்ளியையும், கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...