மறைந்த விஜயகாந்திற்கு தாராபுரத்தில் அனைத்து கட்சியினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்

தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மறைந்த தே.மு.தி.க தலைவரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



நிகழ்வில் மறைந்த விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



முன்னதாக பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலம் சி.எஸ்.ஐ ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் சாலை உடுமலை சாலை பெரிய கடைவீதி வழியாக அண்ணா சாலையில் ஊர்வலம் நிறைவு அடைந்தது.



தே.மு.தி.க நகரச் செயலாளர் ஷானவாஸ், மற்றும் தி.மு.க, அதிமுக, பா.ஜ.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ். ம.தி.மு.க, திராவிட கழகத்தினர், தமிழ் புலி கட்சியினர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ் அணியினர், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் முன்னேற்ற கழகம், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...