வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் யானை தூங்கும் காட்சி வெளியீடு

தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சென்று உள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானையும், குட்டி யானையும் அயர்ந்து உறங்கும் காட்சி கேமிராவில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி வருகிறது.



பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் உலாவும் யானைகளை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பண்ணிமேடு எஸ்டேட் பகுதியில் 13 காட்டு யானைகள் குட்டியுடன் எஸ்டேட் பகுதியில் சுற்றி வந்தது. இதில் இரவு நேரத்தில் குட்டி யானை கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றது. அதை மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் குட்டி யானையை தாயுடன் சேர்த்தனர்.

அந்த தாய் யானையையும் குட்டி யானையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சென்று உள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து உள்ளனர்.



தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானையும் குட்டி யானையும் அயர்ந்து உறங்கும் காட்சி பதிவு செய்து வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...