விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பூரில் மௌன அஞ்சலி ஊர்வலம்

மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினரும் ஊர்வலமாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருப்பூரில் நடைபெற்ற மௌன அஞ்சலி ஊர்வலத்தில் திமுக , அதிமுக, பாஜக , கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த வாரம் சென்னையில் உயிரிழந்தார்.



அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரக்கூடிய நிலையில் திருப்பூர் மாநகர மாவட்ட தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



திருப்பூர் குமரன் நினைவகத்தில் துவங்கி மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இந்து முன்னணி, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தொழில்துறையினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...