குள்ளம்பாளையத்தில் உள்ள தேங்காய் தொட்டி சுடும் ஆலைக்கு எதிர்ப்பு - வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தேங்காய் தொட்டி சுடும் ஆலையில் வாட்டாட்சியர் நேரில் ஆய்வு நடத்தினார். புதுப்பிக்கும் பணி நடைபெற்றால், ஆலை சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர், இதுதொடர்பாக வரும் ஐந்தாம் தேதி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தில் தேங்காய் தொட்டிகளை சுடும் ஆலை சட்ட விரோதமாக இயங்கி வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் நோய் தொற்று ஏற்படுவதாகவும் கால்நடை மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ள காரணத்தால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆலை சிறிது காலம் மூடப்பட்டது.



இந்நிலையில் மீண்டும் அந்த ஆலை புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் ஆலை இயங்குவதாகவும் கோரி ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் இன்று முற்றுகையிட்டனர்.



விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வட்டாட்சியர் இன்று நேரில் அந்த ஆலையை ஆய்வு மேற்கொண்டார். ஆலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர், வரும் ஐந்தாம் தேதி விவசாயிகள் மற்றும் ஆலை உரிமையாளருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் ஜனவரி 10ஆம் தேதி அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...