வால்பாறை அட்டகட்டி பகுதியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

முகாமில் தொகுப்பு வீடு, கழிப்பறை, கல்வி கடன், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகள் உதவித்தொகை, மாற்று திறனாளி உதவி தொகை, போன்ற உதவிகளுக்காக பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருக்கிறது. ஒன்னாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு உட்பட்ட கவர்கள், சக்தி, தலனார், ஊமையாண்டி முடக்கு, வாட்டர்பால்ஸ் ஆகிய எஸ்டேட் பகுதிகள் மற்றும் பழங்குடி கிராமம் பூனாட்சி, கீழ் பூனாட்சி, வெள்ளிமுடி, அப்பராளியார் போன்ற ஆதிவாசி பழங்குடி கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்படும் வகையில் அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.



காலை 10 மணிக்கு துவங்கிய முகாம் 3 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் நகராட்சி பணியாளர்கள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், மருத்துவத்துறை, தீயணைப்பு துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வனத்துறை, ஆகிய அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டனர்.



முகாமில் தொகுப்பு வீடு வேண்டும், கழிப்பறை வேண்டும், கல்வி கடன் வேண்டும், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெற்றோர்களை இழந்து குழந்தைகள் உதவித்தொகை,மாற்று திறனாளி உதவி தொகை, போன்ற உதவிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது இதில் 213 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வளிக்கப்படும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட துணை ஆட்சியர் நிரைமதி, வால்பாறை வட்டாட்சியர் வாசுதேவன், நகராட்சி ஆணையாளர் பெர்பெட்டி டெரன்ஸ் லியோ, நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், திமுக நகரச் செயலாளர் சுதாகர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...