3,500 ரூபாய் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

சத்துணவு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சத்துணவு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்குதிடுதல் மற்றும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு 3 இலட்ச ரூபாய் பணிக்கொடை வழங்குதல் ஆகிய கோரிக்களை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் அவ்வமைப்பினர் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் மாநில தலைவர் பழனிச்சாமி, சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், சத்துணவு ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், இல்லையெனில் வருகின்ற ஏப்ரல் 25-ம் தேதி முதல் தமிழகத்தில் 43 ஆயிரம் சத்துணவு மையங்களையும் இழுத்து மூடி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.



இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...