சாலை விபத்தில் இரு வாலிபர்கள் பலி

கோவை குனியமுத்தூரை அடுத்த பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் (20) மற்றும் அசாருதீன் (20). இவர்கள் இருவரும்  கரும்புக்கடை பகுதியில் பாரம் தூக்கும் பணி செய்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு பணி முடிந்து ஆத்துப்பாலம் வழியாக, ஜாபர் தனது வாகனத்தில் அசாருதீனை அழைத்துக் கொண்டு செல்லும்போது, சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது தூக்கியெறியப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், போக்குவரத்து புலனாய்வு துறை (மேற்கு) போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு வாலிபர்களின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...