கோவையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீவிபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசம்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் பரசுராம் என்பவருக்கு சொந்தமாக அபிராமி பர்னிச்சர்ஸ் என்னும் பர்னிச்சர் கடை உள்ளது. இக்கடையில் இன்று காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தீயணைப்புத் துறை அலுவலகங்களில் இருந்து இருவாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அனுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் அக்கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து நாசமானது. 

இரண்டாவது மாடியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...